தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்!

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

உலகின் மிகச்சிறந்த நடிகன்

உலகின் மிகச்சிறந்த நடிகன்....அவன் செய்த ஒரே தவறு தமிழகத்தில் பிறந்தது...தேசிய அளவில் கூட அவன் முகம் வடக்கத்தி சக்திகளால் இருட்டடிப்பு செய்யப்பட்டது.. ஒரு முறை கூட அங்கீகாரம் கிடைக்கவில்லை. அமெரிக்க தேசத்தில் பிறந்திருந்தால் பல ஆஸ்கார் விருதுகள் அவன் காலடியில் வந்து விழுந்திருக்கும். அதுவும் நல்லதுதான். இல்லாவிட்டால் தமிழர்களாகிய நாம் அந்த மாபெரும் கலைஞனை இழந்திருப்போம். ஆம்.. நடிகர் திலகத்தை பற்றிதான் இந்த கட்டுரை. சிவாஜியை மத்திய அரசு அவமதித்தது ஒன்றும் ஆச்சர்யமல்ல. மகாகவி பாரதி, வ.உ.சி, நாகேஷ் முதல் சமீபத்தில் விஸ்வநாதன் ஆனந்த் வரை மத்திய அரசு தமிழனை அங்கீகரிக்காமல் இருப்பதும், சீண்டி பார்ப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

                                                                            

சிவாஜி மீது பிரகாஷ்ராஜ் எனும் நடிகருக்கு அப்படி என்ன கோபமோ தெரியவில்லை. பல முறை அவரை நையாண்டி செய்வதில் செல்லத்துக்கு ஒரு ஆத்ம திருப்தி. வெள்ளித்திரை படத்தில் செல்லமும் ப்ரித்விராஜூம் பேசும் ஒரு காட்சியில் "அம்மா செத்தால் வாயில் அடித்து கொண்டு அழுவோம் நாங்கள்(தமிழ் நடிகர்கள்..குறிப்பாக சிவாஜி). ஓவர் ஆக்டிங் செய்தாலும் நாங்கள் நடிகர்கள்தான்" என கிண்டல் செய்திருப்பார் செல்லம். இன்னும் பல உதாரங்கள் உண்டு. நடிக்க தெரியாதவன் ஓவர் ஆக்டிங் செய்வதற்கும், நடிப்பின் சிகரம் சற்று மிகையாக நடிப்பதற்கும் மிக பெரிய வித்யாசம் உள்ளது செல்லமே.


                                                         

இறந்து போன ஒரு கலைஞனை கிண்டல் செய்வது எந்த நாகரீகத்தில் சேர்த்தி?. யதார்த்த நடிப்பு.. யதார்த்த நடிப்பு என்று எதை சொல்கிறாய் செல்லம். வசூல் ராஜா படத்தில் ஒரு காலேஜ் டீன் லூசு மாதிரி சிரிப்பதையா? அல்லது குங்கும போட்டும் பட்டு சட்டையும் போட்டு கொண்டு "அவன தூக்குடா ஏய்.." என கத்துவதையா?  எங்கள் சிங்கம் சிவாஜி ஹரிச்சந்திரா, முதல் மரியாதை, தேவர் மகன் என பல கால கட்டங்களில் யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியதை உலகறியும்.

                                
                                                       

எங்கள் சிங்கம் தொடாத பாத்திரங்கள் இல்லை. எட்டாத சிகரங்கள் இல்லை.

                                                  

அழகு என்றாலும் .....
                                                           


கம்பீரம் என்றாலும்.......

                                                           


ஸ்டைல் என்றாலும்.....

                                                     


பாசம் என்றாலும்...

                                                 


ஒரே ஷாட்டில் உலகில் எவருமே பேசாத  பல பக்க வசனம் என்றாலும்...
 (படம்: ராஜா ராணி)       
                                             


உலக சபையில் அங்கீகாரம்  பெறுதல் என்றாலும்....


                                    

முழு நீள நகைச்சுவை என்றாலும்................

                             


புரட்சிகர வசனங்கள் என்றாலும்....

                         

ஆன்மிகம் என்றாலும்....


                                  


நட்பு என்றாலும்.........

                                 


உலக அளவில் அங்கீகரம் பெற முழு தகுதி வாய்ந்த சிங்கத்தமிழனை தேசிய அளவில் கூட தெரியவிடாமல் இருட்டடிப்பு செய்த மத்திய அரசே....தலை கவிழ்ந்து வெட்கப்படு..

எங்கள் பொக்கிஷத்தை மேலும் சீண்டுவதை விட்டு விடு செல்லமே... பிள்ளை பிராயத்தில் வறுமையில் சுழன்று, உணவுக்கு அலைந்து சிவாஜி பட்ட ரணங்கள் ஆயிரம்.  இன்று எங்கள் இதயங்களில் குடி கொண்டு இருக்கும் மகா கலைஞனின் ஆத்மாவை குதராதே.. அது அமைதியாக இளைப்பாரட்டும்....



எங்கள் சிங்கம்...அமைதியாக இளைப்பாரட்டும்...



வந்தாரை வாழ வைக்கும் பூமி இது செல்லம்...வாழ்க நீ பல்லாண்டு...

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

மல்டிப்ளெக்ஸ் மாயாஜாலம்

                                      
                                                         Booking online ticket Inox Vizag
                                                        


 மல்டிப்ளெக்ஸ் எனும் மாயாஜால உலகம் மதராசில் இன்று ஒரு தவிர்க்க இயலாத அங்கமாகிவிட்டது.. இளைய சமூகத்திற்கு.. சிறந்த விசுவல் எபெக்ட் அல்லது 3D தொழில் நுட்பத்துடன் நல்ல ஒரு ஆங்கில படம் வந்தால் மட்டுமே நான் மல்டிப்ளெக்ஸ் செல்வதுண்டு. மதுரை மாநகரில் அருவாள் தூக்கி கொண்டு குறுக்கும் நெடுக்குமாக ஓடுவது, தமிழ் சினிமாவில் தீராத வியாதியான காதல் காட்சிகள் மற்றும் யதார்த்த சினிமா என்ற பெயரில் கொடூரமான வன்முறை காட்சிகள் கொண்ட படங்களுக்கு மல்டிப்ளக்ஸில் பணத்தை இறைப்பது என்னை பொறுத்தவரை தண்ட செலவு...அதுவும் என் போன்ற நடுத்தர வர்க்கத்தில் வேலைக்கு போகும் ஆண் மகனுக்கு.   


                                                       




 சில காலமாக சத்யம் தியேட்டரில் நான் சந்திக்கும் தலையாய  பிரச்னை "கோக கோலா". 450ml fountain coke விலை 45 ரூபாய் என டிஸ்ப்ளே செய்யப்பட்டு இருக்கும். ஆனால் பெரும்பாலும் அது கிடைக்காது. 600ml (55 ருபாய்) பாட்டிலை தலையில் கட்ட பார்ப்பார்கள். ஏன் 450ml இல்லை என்று கேட்டால் தீர்ந்து விட்டது என்பார்கள். நான் கேட்டேன் "தீந்து போச்சா? என்னங்க சொல்றீங்க? மிசின் பட்டனை தட்டினால் 600ml coke வரும்... ஆனால் 450ml வராதா?". பதில் இல்லை. "டேய் டேய் செகப்பு சட்ட" என சொல்வதை கண்டு கொள்ளாமல் அடுத்த வாடிக்கையாளரை கவனிக்க தொடங்கி விட்டார்.  என்னங்கடா உங்க 5 ஸ்டார் ஹோட்டலு... என கவுண்டமணி சொன்னது நினைவில் வந்தது... ஒரு சூடான நாய்(அதாங்க...ஹாட் டாக்) விலை ஜஸ்ட் 50 ருபீஸ். அதை ஆர்டர் செய்தால்.. ஜில்லென்று ஒரு ரொட்டியை கொடுத்தார் செகப்பு சட்டை. நான் கேட்டேன் "ஹாட் டாக் எதுக்கு ஜில் என்று இருக்கிறது?" மீண்டும் பதில் இல்லை. ஆங்கிலத்தில் மிரட்டினால் தான் இங்கெல்லாம் பருப்பு வேகும் போல. நம்ம தான் அதுலயும் அரை குறையாச்சே... .


                                                      




சரி.. அண்ணா நகர் அருகே உள்ள பீ.வீ.ஆர். சினிமாஸ் சென்று பார்ப்போம் என்று அங்கே நுழைந்தேன்....பிரம்மாண்டமான  food court கண்ணில் பட்டது. பெப்சி எவ்ளோ என்றேன்...50 ருபாய் என்றான் ப்ளூ சட்டை.. 50 ரூபாய் நீட்டினேன்.. வாங்கவில்லை. ஏன் என்றேன்.. "இங்க குறைந்தது 100 ரூபாய்க்கு வாங்க வேண்டும்" என்றான். நான் கேட்டேன் "நான் ஒரு ஆளு எப்டி நூறு ரூவாக்கு திங்க முடியும்?" பதில் இல்லை.


இந்த மல்டிப்ளெக்ஸ் உள்ளே நுழைந்தால், நம்ம இளசுகள் முதல் பெருசுகள் வரை ப்ளூ ஜீன்ஸ் போட்டு கொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருந்தனர்....அதுவும் கத்திரி வெயிலில். வெள்ளைக்காரன் சுரங்கத்தில் வேலை செய்பவர்களுக்காக நீடித்து உழைக்க கண்டு பிடித்த ஜீன்ஸ் நிலைமை இங்கே இப்படி. நடக்கட்டும்.....


ஆக மொத்தத்தில் ஒரு வாரம் நைட் ஷிப்ட் செய்து சம்பாதித்த காசு இரண்டு மணி நேரத்தில் கரைந்து போனது.... மொக்கையாக ஒரு படம் பார்த்து விட்டு காசை கரி ஆக்கிய வெறுப்பில்  வெளியே வந்த என் நண்பர்  ஒருவனை தேடினார். அவன் வேறு யாரும் இல்லை. டிக்கெட் கவுன்டரில்...."என்ஜாய் தி மூவி சார்" என்றானே டிக்கெட் குடுக்கும் பையன்...ஆள் கண்ணில் படவில்லை. இனி வருசத்துக்கு ஒரு முறைதான் மல்டிப்ளெக்ஸ்... அதுவும் தனியாக போவனும். ரன் படத்தில் விவேக் சொல்வது போல "மெட்ராஸ்ல நெறைய புடுங்கிகள் இருக்கிறார்கள்" என்பது உண்மைதான்.. டிக்கெட், ஹாட் டாக்.. என நிறைய புடுங்கி விட்டார்கள்...போதுமடா சாமி....


கொசுறு: சத்யம் தியேட்டரின் அடுத்த மல்டிப்ளெக்ஸ் உதயமாகிவிட்டது... திரை பெயர்கள்: ஸ்பாட்,  கைட்ஸ், கார்வ், வீவ், plush மற்றும் blush.

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

ரஜினி - ஒரு பார்வை



ஒரு திரைப்படம் வருவதற்கு முன்பே அது பற்று பல நெகடிவ் விமர்சனங்கள்... எந்திரனை பற்றி தான் சொல்கிறேன். அதுவும் குறிப்பாக ரஜினியை மட்டும் குறி வைத்து. அண்ணாமலைக்கு பிறகு ரஜினியின் படங்கள் எதுவும் என் இதயத்தை தொடாவிட்டாலும், ரஜினியால் தமிழ் சினிமா கெட்டு விட்டது போல பலர் உரக்க கத்துவது ஏன் என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்து சமீப காலமாக வந்து கொண்டிருக்கும் படங்களை போல அதீத வன்முறை மற்றும் ஆபாச காட்சிகள் ரஜினியின் படங்களில் என்றுமே வந்ததில்லை. ரஜினியை விமர்சனம் செய்வது அவர்களது உரிமை என்றாலும்... தீவிரமான வார்த்தை பிரயோகங்களை தவிர்ப்பது நல்லது. 


                                        


என்னை பொறுத்த வரை ரஜினியை போல் யதார்த்தமான தமிழ் நடிகரை பார்த்ததில்லை.. குறிப்பாக 16 வயதினிலே, எங்கேயோ கேட்ட குரல், ஆறிலிருந்து அறுபது வரை என பல 
படங்கள்.. பல ஆண்டு காலமாக தமிழ் சினிமாவை ஆண்டு கொண்டு இருந்த சிகப்பு தோல் மற்றும் மேக் அப் நாயகர்களுக்கு நடுவே அதிரடியாக நுழைந்தது இந்த கருப்பு மின்னல்.. பாலச்சந்தர்,மகேந்திரன் என பலரால் பட்டை தீட்டப்பட்டது. 




                                              
                                    


ஒரு முழு நீள நகைச்சுவை படத்திலும் தன் திறமையை நிரூபித்தவர்...உதாரணம் தில்லுமுல்லு. அந்த படத்தில் மீசையை எடுத்து விட்டு, தேங்காய் சீனிவாசனை பார்க்க செல்வார். தேங்காய் கார்டனில் தண்ணி பாய்ச்சி கொண்டு இருக்கையில், நம்ம ஆளு சொல்வார் "டேய் தோட்டக்காரா". உள்ளே சென்று ரிச் உடை அணிந்து கொண்டு ரஜினியை பார்த்து கேட்பார் தேங்காய் "என்னை இந்த டிரஸ்ல பாத்ததும் ஷாக் ஆயிருப்பியே?". நம்ம ஆளு "இல்ல. தோட்டகாரன் டிரஸ் ல முதல்ல  பார்த்ததால தோட்டகாரன்னு சொன்னேன். அது உங்க தப்பு".  பல முறை பார்த்த படங்களில் இதுவும் ஒன்று. முள்ளும் மலரும், நினைத்தாலே இனிக்கும் என அவர் தொட்ட சிகரங்கள் பல. கமலுடன் நடித்த பல படங்களில் கமலை விட நடிப்பு திறமையை நன்றாக வெளிப்படுத்தி இருப்பார் ரஜினி. அது நெகடிவ் ரோல் ஆக இருப்பினும். 
                                           
                                     


எல்லோரும் இன்று ரஜினி கோடி கோடியாக சம்பாதித்த பணத்தை பற்றி பேசுகிறோம். அவரை விமர்சனம் செய்பவர்கள்.. சற்று சிந்திக்க. கோடம்பாக்கம் ஸ்டுடியோக்களில் தெரு தெருவாக நடிக்க வாய்ப்பு கேட்டு அவர் அலைந்த நாட்கள் எத்தனை, பட்ட அவமானங்கள் எத்தனை... அது அவரை தவிர யாருக்கு தெரியும். ரஜினியின் சில குழப்பமான பேச்சுக்கள் மற்றும் அண்ணாமலைக்கு பிறகு வந்த படங்களில் எனக்கு உடன்பாடு இல்லைதான். ஆனால் ரஜினியை விமர்சிக்க வேட்டியை வரிந்து கட்டி கொண்டு தரம் தாழ்ந்து விமர்சிப்பதும் தவறு. ரஜினி ரசிகன் என்ற பெயரில் அதிக ஆர்வ கோளாறில் அவரை அரசியலுக்கு இழுத்து வர துடிப்பதும் தவறு. அவருக்கும் குடும்பம் உள்ளது. ஆன்மீக தேடல் உள்ளது. விட்டு விடுங்கள். சச்சின், ரஹ்மான், ரஜினி போன்றவர்கள் எத்தனை உச்சத்தை அடைந்தாலும்.. அமைதி காப்பது ஒன்றே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு உதாரணம். ஆரோக்யமான விமர்சனங்களை மட்டுமே முன் வைப்போம். குழாயடி சண்டை வேண்டாம் என்பது என் கருத்து. என்ன சொல்றீங்க........